நியூசிலாந்தில் கிரிக்கெட் வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு

நியூசிலாந்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, அங்குள்ள கிரிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு  மசூதி உள்பட பல இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த மசூதியில் தொழுகைக்கு சென்ற வங்கதேச கிரிக்கெட் வீர‌ர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இது மிகவும் அச்சுறுத்தலான சம்பவம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ள கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், தங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்