இலங்கை கடற்படையால் கைதான 14 மீனவர்கள் : 14 பேரையும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்

ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பு
இலங்கை கடற்படையால் கைதான 14 மீனவர்கள் : 14 பேரையும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்
x
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேரை  இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்ததாக கடந்த மாதம் 22ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 5 பேரை,  தலைமன்னார் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளது. இதேபோல்,  கடந்த 26 ஆம் தேதி,சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகு குறித்த விசாரணை, வருகிற மே மாதம் 8 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரி​வித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்