அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை
அமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அரோரா நகரில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியரான மார்டின், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த மார்டின், சட்டவிரோதமாக தாம் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சக ஊழியர்களை தாக்கியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், மார்டின் சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு போலீசார் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
Next Story