இலங்கை தமிழ் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் வேண்டும் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று,அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை தமிழ் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் வேண்டும் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
x
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண பகுதிக்கு, ரணில் தலைமையிலான அமைச்சர்கள் குழு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரணில் விக்ரமசிங்கே,  தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவது என்பது இலங்கையை பிளவுப்படுத்துவதாக அமையாது என்றார். நாட்டின் பிற பகுதி மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள், சலுகைகள், தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக உரிமைகளை வழங்குவதில் இருந்து இலங்கையின் வடக்கு பகுதி மக்களை ஒதுக்கி வைக்க முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்