மன்னிப்பு கோரினார் தாய்லாந்து இளவரசி
தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். அந்நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மன்னர் மகா வஜ்ரலோங்கோன் தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார். இது விதிமுறைகளுக்கு எதிரானது என மன்னர் கண்டனம் தெரிவித்ததால், தேர்தல் ஆணையம் இளவரசி பெயரை நீக்கியது. இந்நிலையில், இளவரசி இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார்.
Next Story