கத்தார் நாட்டில் ஆவின் பால் விற்பனை தொடங்கி வைத்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டில் ஆவின் பால் விற்பனை தொடங்கி வைத்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் பால் விற்பனை தமிழா்களின் பெருமையை வெளிநாடுகளில் பறைசாற்றும் வகையில் உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் குமரன், ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ், அரசு முதன்மை செயலாளர் கோபால், கத்தார் நாட்டின் ஆவின் இறக்குமதியாளா் யூசுப் ஜாபர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்