மெக்ஸிகோ : எரிபொருள் குழாய் வெடித்ததில் 66 பேர் பலி

மெக்ஸிகோ நாட்டில் எரிப்பொருள் குழாய் வெடித்ததில் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மெக்ஸிகோ : எரிபொருள் குழாய் வெடித்ததில் 66 பேர் பலி
x
மெக்ஸிகோ நாட்டில் எரிப்பொருள் குழாய் வெடித்ததில் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹிடால்கோ மாகாணத்தில் உள்ள லஹூலிலிபன் நகரில் எரிபொருள் குழாயில் சட்ட விரோதமாக துளையிட்டு, பெட்ரோலை கொள்ளையடித்து உள்ளூர் மக்களுக்கு விற்கும் சம்பவம் அரங்கேறி வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று, துளையிடப்பட்ட பெட்ரோல்  குழாயில், கசிந்த பெட்ரோலை பிடிக்க சென்ற போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பொதுமக்கள் 66 பேர் உயிரிழந்துள்ளனர், 76 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்