வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட போகிறேன் - வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர்

இலங்கையில், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட போவதாக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட போகிறேன் - வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர்
x
இலங்கையில், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட போவதாக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆளுநராக நேற்று பதவியேற்ற பிறகு பேசிய அவர், வீழ்ந்திருக்கும் தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றிருப்பதாக கூறினார். வட மாகாணத்தில் தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படுவதில்லை என கூறிய ஆளுநர் சுரேன் ராகவன், வரும் ஏப்ரல் மாதத்திற்குள், பெயர் பலகைகளில் இரண்டு மொழிகள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்