ரணில் அணிக்கு தாவிய சிறிசேனவின் 3-எம்.பி.க்கள்...

சிறிசேன கட்சியில் இருந்து விலகிய 3 எம்.பி.க்கள், ஓநாய்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என கூறியது நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரணில் அணிக்கு தாவிய சிறிசேனவின் 3-எம்.பி.க்கள்...
x
சிறிசேன கட்சியில் இருந்து விலகிய 3 எம்.பி.க்கள், ஓநாய்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என கூறியது நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை நாடாளுமன்றம் கூடியதும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் இருவர், ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து அணி மாறினார். அவர்களுக்கு பிரதமர் ரணில் தரப்பு பெரும் வரவேற்பளித்தது. பின்னர், நாடாளுமன்றத்தில் பேசிய அணி மாறிய எம்.பி., விஜித் விஜயமுனி சொய்ஸா, தமக்கு அமைச்சர் பதவி கொடுத்த மைத்ரிபால சிரிசேனாவுக்கு நன்றி தெரிவித்தார். அதற்காக, ஓநாய்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்று அவர் கூறினார். இது, இலங்கை மட்டுமல்ல சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்