ஏமன் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை

ஏமன் நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏமன் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை
x
ஏமன் நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஏமன் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போர் நிறுத்தம் செய்ய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஏமன் நாட்டின் அமைதியை ஏற்படுத்தும் ஐ.நா.வின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்