"அரசியல் சட்டம் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு" - ரனில் விக்கிரமசிங்கே உறுதி

புதிய அரசியல் சட்டம் மூலமாக, தமிழர் பிரச்னைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக ரனில் விக்கிரமசிங்கே உறுதியளித்துள்ளார்.
அரசியல் சட்டம் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு - ரனில் விக்கிரமசிங்கே உறுதி
x

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக தொகையை செலவிட்ட அரசு என்ற பெருமை அடைவதாக குறிப்பிட்டார். தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தருவதாக கூறிய ரனில் விக்கிரசிங்கே, புதிய அரசியலமைப்பின் மூலம், ஒற்றையாட்சி முறையில், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வினை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படப் போவதாக உறுதி அளித்தார். இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் செயல்படுவோம் எனவும் ரனில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்