ரணிலுக்கு ஆதரவு : நம்பிக்கை தீர்மானம் வெற்றி

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பெரும்பான்மை உள்ளது என்ற நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரணிலுக்கு ஆதரவு :  நம்பிக்கை தீர்மானம் வெற்றி
x
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பும் வாக்களித்துள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 117 வாக்குகள் பதிவான நிலையில், தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்தார். தீர்மானம் வெற்றி பெற்றதை யடுத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே, ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க ஒன்றிணைந்து உள்ளதாக கூறினார். சிங்களவர்களாகவோ, தமிழர்களாகவோ இஸ்லாமியர்களாகவோ செயற்படவில்லை என்றும் இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்பட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டார். இதனையடுத்து, நாடாளுமன்றம் மீண்டும் வருகிற 18 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்