பறக்கும் விமானத்தில் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...

கடந்த பத்தாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
பறக்கும் விமானத்தில் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...
x
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்தப் பயணி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும் அவர் மேலும் மது வேண்டும் என கேட்டபோது விமான பணிப்பெண்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் விமான ஊழியர்களுடனும் சக பயணிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், ஊழியர்கள் அவருக்கு எச்சரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர். அதனையும் வேகமாக கத்தி படித்த அந்தப் பயணி சக பயணி ஒருவரின் மதுவை எடுத்துக் குடித்துள்ளார். 

இதையடுத்து ஹீத்ரோ விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். வாக்குவாதத்தின் போது தான் ஒரு சர்வதேச வழக்கறிஞர் என்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடி வருவதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்