இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று பொதுத் தேர்தல்

இலங்கையில் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று பொதுத் தேர்தல்
x
நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பாக இலங்கை அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 19ஆம் தேதி தொடங்குவதாகவும் 26ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதியன்று கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 70, 33 மற்றும் 62 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் சட்டப் பிரிவுகளின் கீழும், இந்த பிரகடனத்தை அதிபர் சிறிசேனா பிறப்பித்துள்ளதாகவும், அரசிதழில்  வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்