"நாடாளுமன்றத்தை முன்னதாக கூட்டும் திட்டம் இல்லை" - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி தான் கூடும் என்றும் அதற்கு முன்னதாக கூட்டுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை முன்னதாக கூட்டும் திட்டம் இல்லை - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்
x
தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அன்றைய தினம் அதிபர் சிறிசேனாவின் கொள்கை அறிவிப்பு மட்டுமே இடம் பெறும் என்றும் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறாது எனவும் குறிப்பிட்டார். வரும் 14ம் தேதிக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கூட்டும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்கு முன்பாக சபையை கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்