" ராஜபக்சேவை பிரதமர் ஆக நியமித்தது ஏன்?" - மைத்ரிபால ஸ்ரீ சேனா விளக்கம்

இலங்கையில், ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு, புதிய பிரதமர் ஆக, மஹிந்த ராஜபக்சேவை நியமித்தது ஏன் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா விளக்கம் அளித்துள்ளார்.
 ராஜபக்சேவை பிரதமர் ஆக நியமித்தது ஏன்? -  மைத்ரிபால ஸ்ரீ சேனா விளக்கம்
x
இலங்கையில், ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு, புதிய பிரதமர் ஆக, மஹிந்த ராஜபக்சேவை நியமித்தது ஏன் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா விளக்கம் அளித்துள்ளார். கொழும்பில்,கொட்டும் மழையில், ஐக்கிய மக்கள் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்திய அரசை தம்மிடம் இருந்து பிரிக்க, ரணில் விக்ரமசிங்கே முயற்சி செய்ததாக குற்றஞ்சாட்டினார். சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி, ரணில் நீக்க முடிவை எடுத்ததாக கூறிய ஸ்ரீ சேனா, எடுத்த முடிவில் இருந்து தாம் ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதி என்றும் மைத்ரிபால ஸ்ரீ சேனா நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்