இலங்கை அரசியலில் பரபரப்பு : ரணில் விக்ரமசிங்கே கட்சியின் 2 எம்.பிக்கள் கைது
ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது இலங்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித்த தெவரப் பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதிபர் சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி பிரமுகர்மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story