சர்சைக்குரிய பதிவுகளை தடுக்க வல்லுனர் குழு - பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

அரசியல் தலைவர்கள் குறித்து பொதுமக்கள் உரையாடுவதை வரவேற்கும், அதேவேளையில் அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
சர்சைக்குரிய பதிவுகளை தடுக்க வல்லுனர் குழு - பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு
x
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்திக்கொண்டு சர்சைக்குரிய பதிவுகளை தடுக்கும் வகையில் வல்லுனர் அமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. தேர்தல் சுதந்திரமாக நடைபெற தங்கள் வலைதளம் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் குறித்து பொதுமக்கள் உரையாடுவதை வரவேற்கும், அதேவேளையில் அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எனவே வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் பதிவுகளை தடுக்கும் வகையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்