கொலம்பியா : 3,000 அரிய வகை வண்ண பூக்களின் கண்காட்சி
கொலம்பியாவில் நடைபெற்ற வண்ண வண்ண மலர்க் கண்காட்சி காண்போரைக் கவர்ந்தது.
போகோடா தாவரவியல் பூங்காவில் தொடங்கிய இந்த கண்காட்சியில் உலகில் அரிய வகையைச் சேர்ந்த பூக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள சில பூக்கள் உலகில் ஓரிரு இடங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 270 வகையான பூக்களில் 3 ஆயிரம் பூக்கள் அரிய இனங்களைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story