கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட நட்பு - இந்திய ரசிகருக்கு உதவி செய்த பாகிஸ்தான் ரசிகர்

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் என்றால் ஒரு போர் போல ரசிகர்கள் பார்க்கும் இந்த கால கட்டத்தில் தான் இந்திய ரசிகரின் பயண செலவை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஏற்றுள்ளார்.
கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட நட்பு - இந்திய ரசிகருக்கு உதவி செய்த பாகிஸ்தான் ரசிகர்
x
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் என்றால் ஒரு போர் போல ரசிகர்கள் பார்க்கும் இந்த கால கட்டத்தில் தான் இந்திய ரசிகரின் பயண செலவை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஏற்றுள்ளார். சுதிர் குமார் சௌத்ரி இந்தியா விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டியிலும் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். மூவர்ண கொடியை உடல் முழுவதும் பூசி கொண்டு MISS U SACHIN TENDULKAR என்ற வாசகத்துடன் மைதானத்தில் வலம் வந்து பிரபலமானவர். சச்சின் கிரிக்கெட் ஆடும் வரை இவருக்கு போட்டிக்கான டிக்கெட் கிடைத்துவிடும். 

இந்த நிலையில் துபாயில் நடைபெறும் ஆசிய போட்டியை பார்ப்பதற்காக தனது பைக்கை 35 ஆயிரம் ரூபாய்க்கு  விற்றுள்ளார். ஆனால் போதிய பணம் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிர் சுதிருக்கு போன் செய்து துபாய்க்கு வருகிறாயா என்று கேட்டுள்ளார். தம்மிடம் பணம் இல்லை என்று சுதிர் சொன்ன உடன் விமான டிக்கெட் செலவையும் தங்கும் செலவையும் தாம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார் பஷீர். பஷீரின் உதவியால் தற்போது சுதிர் துபாய்க்கு வந்துள்ளார். 

சுதிர் எனது சகோதரர் போலவும் சுதிர் இல்லாமல் கிரிக்கெட் போட்டியை பார்த்தால் அது நன்றாக இருக்காது என்றும் தோழமையுடன் கூறுகிறார் பாகிஸ்தான் ரசிகர் பஷிர் கிரிக்கெட்டிற்காக இரு அணி ரசிகர்களும் அடித்து கொள்ளும் நிலையில் விளையாட்டை நட்பின்பாலமாக அமைப்பதற்கு சுதிரும், பஷிரும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு...

Next Story

மேலும் செய்திகள்