இலங்கை : இறந்த யானைக்கு இறுதி அஞ்சலி..!

இறந்து போன காட்டு யானையின் உடலுக்கு ஏராளமான யானைகள் சுற்றி வந்து அடுத்தடுத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் காண்போரை நெகிழச்செய்துள்ளது.
இலங்கை : இறந்த யானைக்கு இறுதி அஞ்சலி..!
x
இலங்கையின் அனுராதாபுரம் பகுதியில் உள்ள காலபோவா வனப்பகுதியில், தண்ணீர் குடிக்க யானை ஒன்று வந்தது. வயது முதிர்ச்சி மற்றும் காயங்கள் காரணமாக கரையில் மயங்கி விழுந்த அந்த யானை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. 

இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த யானைக் கூட்டம் இறந்து கிடந்த யானையை தொட்டுத் தழுவின. அமைதியாக சிறிது நேரம் அங்கிருந்த யானைகள், பின்னர் களைந்து சென்றன. இதேபோல் மேலும் சில யானைகளும் அங்கு வந்து இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தியது, காண்போரை நெகிழச் செய்தது. 


Next Story

மேலும் செய்திகள்