உலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி : ஸ்பெயின் வீரர் பட்டம்

ஸ்பெயினில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டியின் அடுத்த கட்ட சுற்று நடைபெற்றது.
உலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி : ஸ்பெயின் வீரர் பட்டம்
x
ஸ்பெயினில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டியின் அடுத்த கட்ட சுற்று நடைபெற்றது. இதில், ஆண்கள் பிரிவில் ஸ்பெயினின் விக்டர் பெர்னாண்டஸ் மற்றும் பெண்கள் பிரிவில் ஐபாலா மொரேனோ ஆகியோர் பட்டத்தை கைப்பற்றினர். இந்த போட்டியின் மூலம் புள்ளி பட்டியலில் நடப்பு சாம்பியன் பிலிப்பை பின்னுக்கு தள்ளி, விக்டர் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். கேனரி தீவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில், போட்டியாளர்கள் பாய்மரப் படகில், காற்றின் வேகத்திற்கு ஏற்ப சறுக்கியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  அடுத்த கட்ட போட்டிகள் செப்டம்பர் மாதம், ஜெர்மனியில் நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்