இந்தியா- மியான்மருக்கு இடையே சர்வதேச எல்லை திறப்பு

இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.
இந்தியா- மியான்மருக்கு இடையே சர்வதேச எல்லை திறப்பு
x
இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.  இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தரை வழியாகச் செல்லும் எல்லை பகுதி, முதல்முறையாக திறக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் நந்தன் சிங் மற்றும் மியான்மர் குடியேற்றத்துறை அமைச்சர் யூஏ லிவின் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு மே மாதம் மியான்மருக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்