வேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்

அமெரிக்காவில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்வதற்காக 32 கிலோ மீட்டார் தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு, அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தனது காரை பரிசளித்துள்ளார்.
வேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்
x
அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த வால்டர் கார் என்ற  இளைஞருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. பணியில் சேர்வதற்காக, முந்தைய நாள் இரவு, வால்டர் தயாராகிக் கொண்டிருந்த போது,  அவருடைய கார் பழுதடைந்துள்ளது. காரை சரி செய்ய அவரிடம் பணம் இல்லாததால், காலையில் விரைவாக அலுவலகத்திற்கு செல்ல முடிவெடுத்த வால்டர், இரவே நடக்கத் தொடங்கினார். சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்தை ஓர் இரவில் கடந்தார். அப்போது, அந்த வழியாக வந்த போலீசார், வால்டரிடம் விசாரணை நடத்த, அவர் தான் நடந்து வந்தக் கதையைக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஜெனிஃபர் லேமி என்பவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, வால்டர் தனது அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றார்.  வால்டர் நடந்து வந்த கதையைக் கேட்டிருந்த ஜெனிஃபர், அதைப்பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டார். அவருடைய பதிவு, வேகமாக பரவியது.  அந்தப் பதிவை, வால்டர் வேலைக்குச் சேர்ந்த பெல்ஹூப்ஸ் மூவிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் பார்த்துள்ளார். உடனே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, அவருக்கு தன்னுடைய காரை பரிசாக அளித்தார். குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற இளைஞரின் எண்ணத்திற்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்