விமானத்தில் பிச்சை எடுத்த நபர் - விமான ஊழியர்கள் அதிர்ச்சி
விமானத்தில், பயணி ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் விமான ஊழியர்களை வியப்படைய வைத்துள்ளது.
கத்தார் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தமது கையில் இருந்த பிளாஸ்டிக் பையை நீட்டி, சக பயணிகளிடம் பணம் தரும்படி கேட்டுள்ளார்.
முதலில் அவரை தீவிரவாதி, பணம் கேட்டு மிரட்டுவதாக நினைத்துப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அவர் ஒரு பிச்சைக்காரர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சக பயணிகள் அவருக்கு பிச்சை போட்டனர். விமான ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story