கிணற்றை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி - மூட்டையில் மிதந்த பெண் சடலம் - அரியலூரில் பரபரப்பு

கிணற்றை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி - மூட்டையில் மிதந்த பெண் சடலம் - அரியலூரில் பரபரப்பு
x

அரியலூரில் கிணற்றில் சாக்கு மூட்டையில் மிதந்த பெண் சடலம் யார் என கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தில், கிணறு ஒன்றில் மர்ம மூட்டை ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினரின் உதவியோடு மூட்டையை மீட்ட போலீசார், அதனை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், மூட்டையில் இருந்த பெண் சடலம் யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்