நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் சிமி இயக்கத்திற்கு தடை நீட்டிப்பு

x

பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமி இயக்கத்திற்கான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. ஏற்கனவே சிமி இயக்கத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்த தடை விதிக்கப்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்