தறிகெட்டு ஓடிய கார் இடித்ததில் தூக்கி வீசப்பட்ட நால்வர்..! பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த பாக்கியராஜ், சுஜித்குமார், கண்டவீரவேல், ஜெகதீசன் ஆகிய 4 பேரும் அங்கிநாயனப்பள்ளி அருகே...
x
  • கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த பாக்கியராஜ், சுஜித்குமார், கண்டவீரவேல், ஜெகதீசன் ஆகிய 4 பேரும் அங்கிநாயனப்பள்ளி அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
  • அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடைப்பயிற்சி சென்ற நான்கு பேர் மீதும் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
  • இதில் கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ், சுஜித்குமார், கண்டவீரவேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
  • மேலும் படுகாயமடைந்த ஜெகதீசன் என்பவரை போலீசார் மீட்டு பர்கூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீசனும் உயிரிழந்தார்.
  • இதனை அடுத்து காரை ஓட்டி வந்த ஓசூரை சேர்ந்த தணிகை மலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
  • வாடகை ஓட்டுனரான தணிகை மலை பெங்களூருக்கு பயணி ஒருவரை அழைத்து வர செல்லும் போது கார் கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்