சென்னையை உலுக்கிய மாணவன் கொலை... RDO ஆபீசை சுத்துப்போட்ட குடும்பத்தார்-தள்ளுமுள்ளு சூழலால் பரபரப்பு

திருத்தணி பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்ற மாநில கல்லூரி மாணவரை சில தினங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். மாணவனுக்கு நீதி கேட்டு தலித் மக்கள் முன்னணி மற்றும் மாணவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்திய போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com