கள்ளக்குறிச்சி கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட சான்றிதழ்கள்! - ஆட்சியரிடம் மனு அளித்த எம்.பி

கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட சான்றிதழ்கள். "விரைவில் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"
x

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு, விரைவில் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி எம்.பி மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவி, மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அப்பள்ளி சூறையாடப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தநிலையில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும், அப்பள்ளி மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கள்ளக்குறிச்சி எம்.பி கௌதம சிகாமணி மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்