பாஜக செய்திகள் ஃபேஸ்புக்கில் பகிர்வு...காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

திண்டுக்கல்லில் சமூக வலைதளங்களில் வரும் பாஜக குறித்த செய்திகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அம்பாத்துறை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக சுரேஷ் என்பவர் பணி செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக பாஜக குறித்து வரும் செய்திகளையும், திமுக அரசுக்கு எதிராக வரும் கருத்துகளையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காவல்துறையில் பணியாற்றிக் கொண்டு, மத்திய அரசுக்கு ஆதரவாகவும், தமிழக அரசை விமர்சிக்கும் வகையிலும் பதிவிட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்