சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி... அடுத்தடுத்து நொறுங்கிய 20 கார்கள்

x

இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் லாரி ஒன்று மோதிச் சென்றதால், சாலையோரம் நின்றிருந்த 20க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. சிம்லாவில் ஆப்பில் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, பிரேக் பிடிக்காமல் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி தள்ளிவிட்டு சென்றது. இதில், கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதோடு, சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்த‌தால் கார்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்