"தமிழகத்தில் பி.ஏ-4 வகை கொரோனா" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்...
x
"தமிழகத்தில் பி.ஏ-4 வகை கொரோனா"  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாவலூரைச் சேர்ந்த ஒருவருக்கு, ஒமிக்ரான் பி.ஏ-4 வகை கொரோனா கண்டறியப்பட்டதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது நெகட்டிவ் முடிவு வந்திருப்பதாகவும், பி.ஏ-4 வகை கொரோனாவிற்கு அதிக அளவு பரவும் தன்மை இல்லை என ஆய்வில் தெரியவந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்