திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை;கொலையாளி போலீஸ் பொறியில் சிக்கியது எப்படி?

சென்னை ராயபுரத்தில், திமுக பிரமுகரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை ராயபுரத்தில், திமுக பிரமுகரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த மணலி பேசின் பாலம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 10ம் தேதி வட்டி பணத்தை வாங்கி வருவதாக கூறிச் சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.  அப்போது, சக்கரபாணியின் செல்போன் சிக்னல், கடைசியாக ராயபுரத்தில் உள்ள க்ரேஸ் கார்டன் பகுதியில் இயங்கியதை போலீஸார் கண்டறிந்தனர். அதே நேரத்தில் ராயபுரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீஸார்,  சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில்,  கை, கால்கள் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் தமீம்பானு என்பவருக்கும், சக்கரபாணிக்கும் இடையே தவறான உறவு இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  தமீம் பானு வீட்டில் சக்கரபாணியை கண்ட பெண்ணின் சகோதரர் வாஷிங் பாஷா ஆத்திரத்தில் அவரை அரிவாள்மனையால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. கொலையை மறைக்க உடலை துண்டு, துண்டாக்கிய வாஷிங் பாஷா, அதனை பல்வேறு இடங்களில் வீசும் முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமானது. தலையை அடையாறு பாலத்திலும், உடல் பகுதிகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் வீசிய அவர், கை, கால்களை மறைக்கும் முன்னர் போலீஸாரின் பொறியில் சிக்கினார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தமீம் பானு, அவரது சகோதர் மற்றும் கீழ் வீட்டில் குடியிருந்த ஆட்டோ ஓட்டுனரை  கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்