ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு..!

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.
x
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார். வரும் 28ஆம் தேதி கருணாநிதியின் 
சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்