"தினத்தந்தியால் தமிழனுக்கும், இந்தியருக்கும் பெருமை" - டாக்டர் பொற்செல்வன்

கடைக்கோடி தமிழனும் எளிய முறையில் தமிழ் படிக்க வைத்த பெருமை சி.பா.ஆதித்தனாரை சேரும் என, தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
கடைக்கோடி தமிழனும் எளிய முறையில் தமிழ் படிக்க வைத்த பெருமை சி.பா.ஆதித்தனாரை சேரும் என, தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 11-ம் ஆண்டு, கல்லூரி நாள் விழா நடந்தது. விழாவில் கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கலை குருசெல்வி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பொற்செல்வன், கல்லூரி மலரை வெளியிட்டு  பேசினார். தமிழ் இலக்கியம், செய்தி தாள் போன்றவற்றை முன்பெல்லாம் படிப்பதற்கு மிக கடினமாக இருக்கும், ஆனால் தமிழை கடைக்கோடி தமிழனும் எளிய முறையில் படிக்க வைத்த பெருமை சி.பா.ஆதித்தனாரை சேரும் என அவர் தெரிவித்தார். அதேபோல் தமிழை கடைக்கோடி மக்களுக்கு எளிய முறையில் கொடுத்து வரும் தினத்தந்தியால் தமிழனுக்கும், இந்தியருக்கும் பெருமையாக உள்ளது என்றும் இந்தக் கல்லூரியில் நீங்கள் படிப்பது மாணவிகளாகிய உங்களுக்கு பெருமை என்றும் செவிலியர்களின் பணி மகத்தானது என்றும் பொற்செல்வன் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், சிறப்பு விருந்தினர் டாக்டர் பொற்செல்வனுக்கு நினைவு பரிசு வழங்கினார். விழாவின் முடிவில், கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி நன்றி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்