கெட்டுப்போன இறைச்சி, கேக்குகள் அதிகாரிகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில், கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
x
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில், கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவகங்கள், டீ கடைகள், பேக்கரி கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி, 300 கேக்குகள், தடை செய்யப்பட்ட கலர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குச்சி ஐஸ் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்