"புறவழிச்சாலை பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் எ.வ.வேலு

கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிசாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
x
கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிசாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, கோவை மாவட்டத்தின் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்ததும் 250 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2-வது கட்ட பணி 70 சதவிகிதமும், 3வது கட்டமாக நில எடுப்பு பணி 50 சதவீதமாக நடைபெறுவதாகத் தெரிவித்தார். மேலும் நிலம் எடுக்கும் பணிகளை விரைவு படுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எவ வேலு பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்