பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்த லாரி.! திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்து தீப்பிடித்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது
பெயிண்ட் லாரி அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் கிளீனர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை அருகே ஐதராபாத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பெயிண்ட் பேரல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது பெயிண்ட் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே அருகே இருந்த செம்மாண்டம் பாளையம் செல்லும் இணைப்பு சாலையில் விழுந்தது இதில் லாரியில் உராய்வு ஏற்பட்டு திடீரென லாரி முழுவதும் தீ பற்றிக்கொண்டது இதில் லாரியை ஓட்டி வந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவரும் அவருடன் வந்த கிளீனரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து ஓட்டுனர் மற்றும் கிளீனரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி ஒன்று
தலைகுப்புறக் கீழே விழுந்து தீப்பிடித்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story