"ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சிருக்காது" - அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
x
"ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சிருக்காது" - அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வெளி மாநிலங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். கூடுதல் மின்சாரம் வாங்கவும் முடிவு செய்திருப்பாக கூறிய அமைச்சர், நிலக்கரியை எடுத்து வருவதில் காலதாமதம் உள்ளதாகவும், மத்திய தொகுப்பு மின்சாரம் கிடைக்காததும் காரணம் என்றார். நாள் ஒன்றுக்கு 72ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைத்ததே மின்தடைக்கு காரணம் என்று செந்தில்பாலாஜி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்