குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி
மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பொருட்கள் திருடு போவதாக வந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பரமக்குடியைச் சேர்ந்த சேகர், அழகர் ஆகிய 2 பேரும் குப்பை எடுப்பது போல வந்து பொருட்களை திருடிச் சென்றது உறுதியானது. இதன்பேரில் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story