அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் சோதனை - சோதனையின் போது அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

கோவையில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
x
கோவையில் அதிமுக ஒன்றியச் செயலாளர்  வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். பெரிய நாயக்கன்பாளையம் அடுத்த வீர பாண்டி நாயக்கனுர் பேரூராட்சியில் 3 முறை தலைவராக இருந்தவர் ஜெயராமன். அதிமுக ஒன்றியச் செயலாளரான இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் இவரது வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்ட போது 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அவரது வீட்டு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்