பாதுகாப்பு படை அதிகாரி என கூறி மோசடி - ரூ.1 லட்சத்துடன் மாயமான மர்ம நபர்

சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்தர். இவர், தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விடுவது தொடர்பாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளனர். அதன்படி, டெல்லியில் பணி புரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என் ஜிதேந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வீடு அட்வான்ஸ் தொடர்பாக பேசி உள்ளார். பின்னர், ஜிதேந்தர் ஒரு லட்ச ரூபாயை அனுப்புமாறு கேட்க, மர்ம நபர் ஒரு லட்ச ரூபாயை அனுப்பினால், சேர்த்து இரண்டு லட்சம் ரூபாயாக அனுப்புவதாக கூறி ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக, ஜிதேந்தர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்