பெண் ஊழியர் கொலை வழக்கு; காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா பதிவுகள் - 2 பேர் கைது

புதுக்கோட்டையில் மருத்துவமனை தற்காலிக பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
x
புதுக்கோட்டையில் மருத்துவமனை தற்காலிக பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் உதவியாளராக பணியாற்றி வந்த நாகரத்தினம் என்ற மூதாட்டி சில தினங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது ஓய்வு அறையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகிக்கும் படியான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரத்தநாட்டை சேர்ந்த சிவா மற்றும் வீரராசு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவருமே நாகரத்தினத்தை பலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதியானது. சம்பவத்தன்று மருத்துவமனை வாளகத்தில் மதுஅருந்தி கொண்டு இருந்த இருவரையும் நாகரத்தினம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் மதுபோதையில் நாகரத்தினத்தை பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்