இரு காட்டு யானைகளுக்கு இடையே சண்டை.. உயிரிழந்த ஆண் யானையின் உடல் கண்டெடுப்பு

இரு காட்டு யானைகளுக்கு இடையே சண்டை.. உயிரிழந்த ஆண் யானையின் உடல் கண்டெடுப்பு
இரு காட்டு யானைகளுக்கு இடையே சண்டை.. உயிரிழந்த ஆண் யானையின் உடல் கண்டெடுப்பு
x
இரு காட்டு யானைகளுக்கு இடையே சண்டை.. உயிரிழந்த ஆண் யானையின் உடல் கண்டெடுப்பு

ஒசூர் அருகே இரு காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.அஞ்செட்டி வனச்சரகத்தில் உள்ள மஞ்சு காப்புக்காடு பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது காட்டுக்குள் 17 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை பார்த்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வனத்துறை உயர் அதிகாரிகளும், வன கால் நடை மருத்துவரும் யானையின் உடலை  பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதில், இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சறுக்கி விழுந்து உடலில் காயங்கள் ஏற்பட்டு யானை உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, யானையின் உடலை அடக்கம் செய்த அதிகாரிகள் 2 தந்தங்களை எடுத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்