கோயில் வாசலில் மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள் - ஞாயிறு முழு ஊரடங்கு

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கோவில் வாசலிலே திருமணங்கள் நடைபெற்றுள்ளன
x
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கோவில் வாசலிலே திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 3 ஆவது வாரமாக ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு என்றாலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதனையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் அடைக்கப்பட்டிருந்த போதிலும் கோவில் வாசலில் நின்றவாறு திருமண ஜோடிகள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்