இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள் - பெற்றோரை எச்சரித்த போலீசார்

விழுப்புரத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
x
விழுப்புரத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். நான்கு முனை சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது என அறிவுறுத்திய போலீசார், பெற்றோரை வரவழைக்க செய்தனர். பின்னர், சிறுவர்களிடம் வாகனம் கொடுக்கக் கூடாது என பெற்றோரை எச்சரித்த போலீசார், அபராதம் விதித்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்