சென்னை பல்கலை. தொலைதூர கல்வி திட்டத்தில் முறைகேடு - துணைவேந்தர் அதிரடி

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி திட்டத்தில் நடந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிண்டிகேட் உறுப்பினர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
x
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி திட்டத்தில் நடந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிண்டிகேட் உறுப்பினர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. கடந்த காலங்களில் அரியர் வைத்திருக்கக்கூடிய மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி  தேர்வில் முறையாக பதிவு செய்யாத 117 பேர் முறைகேடு செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவின் விசாரணை அறிக்கை அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்