கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைசெய்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் மட்டுமல்லாது குடும்பத்தினர் என 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கே.பி.அன்பழகனின் உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் என 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Next Story