"பிறந்த குழந்தை என்னுடையதில்லை" - குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை

பூந்தமல்லியில் குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரின் காதலன் கொடுத்த மன உளைச்சலே காரணம் என தெரியவந்துள்ளது.
x
பூந்தமல்லியில் குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரின் காதலன் கொடுத்த மன உளைச்சலே காரணம் என தெரியவந்துள்ளது. பூந்தமல்லியை சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகள் கற்பகம் திருமணமாகி தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 9 வயதில் மகள் உள்ள நிலையில் வேலைக்கு சென்ற போது ஆகாஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே கற்பகத்திற்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் திடீரென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன் மகளின் மரணத்திற்கு ஆகாஷ் தான் காரணம் என கோபிநாத் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து நடத்திய விசாரணையில் பிறந்த குழந்தை தன்னுடையதில்லை என ஆகாஷ் கூறி வந்ததால் மன உளைச்சலில் கற்பகம் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. மேலும் கஞ்சா போதைக்கு அடிமையான ஆகாஷ், தன்னையும், தன் பேத்தியையும் கொன்று விடுவதாக கூறி மிரட்டுவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபிநாத் போலீசில் புகார் மனு அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்